வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஆசிரியப்பெருமானே

களி‌மண்ணாய் இருந்தேன் பாத்திரமாய் மாற்றினார்
கல்லாய் இருந்தேன் சிலையாய் வடிவமைத்தார்
இரும்பாய் இருந்தேன் உருக்கி வார்த்தார்
இலையாய் ஓலையாய் எழுத்தாணியால் நூல்களாக்கினார்
மணலைக்கூட சிற்பமாய் மாற்றியவர் வடிவமைத்தார்
மணல்மேடுகள் கோபுரங்களாய் உயர்ந்தன நிமிர்ந்தன
மயனோமாயனோ தொட்டவை அனைத்தும் காவியமாயின
தெய்வங்கள் சிலைகளாய் சிற்பமாய் கோவிலில்
தொட்டதெல்லாம் பொன்னாக மாற்றிய ஆசிரியப்பெருமானே
தொடுவதற்குப் பாதம்தந்திடு சிரம்தாழ்த்தி வணங்குவோம் !

கருத்துகள் இல்லை: