வெள்ளி, 27 செப்டம்பர், 2019

நினைவலைகள்

உறக்கமற்ற இரவுகளில் உனது பாடல்கள் தாலாட்டுமா
உழைத்துக் களைத்து ஓயும்நேரம் உன்விரல்கள் வருடுமா
மாலைநேரத்து மங்கிய ஒளியில் தோள்சாயக் கிடைக்குமா
மயக்கும் இனிய ‌நிமிடங்களில் அணைப்பின் சுகம்தருமா
காலார நடந்து வர கைகோர்த்த விரல்கள் அழுத்துமா
காதோரம் பேசும் இரகசியங்கள் கற்கண்டாய் இனிக்குமா
தொலைதூரம் சென்றாலும் தொலையாத நினைவலைகள் தொடருமா
தொக்கி நிற்கும் கண்ணசைவில் கதைகள்பல தோன்றுமா
இதழோரம் சுவை சேர்க்க முத்தாரம் தருவாயா
இனியேனும் என்னோடு இணைந்தே எப்போதும் இருப்பாயா
காலமது் உருண்டோடி நரைதோன்றி முகச்சுருக்கம் வருமுன்னே
காதலியே வந்துவிடு காத்திருந்தே கண்கள் களைத்தனவே

கருத்துகள் இல்லை: