வெள்ளி, 27 செப்டம்பர், 2019

சிந்தனை செய்திடு

முழு நிம்மதி என்பது யாது
முழு நிலவுக்கும் களங்கம் உண்டு
குறை என்பது யாது கூறுவீரோ
முறை அற்ற யாவும் குறையோ
சிறை செல்வது குற்றம் செய்தே
கறை படிந்த வாழ்வின் விளைவோ
ஏழைக்கும் செல்வந்தர்க்கும் நிம்மதி இல்லை
ஏனந்த நிலையென்று கூறுதல் இயலுமோ
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன்
ஆண்டவன் நடத்தும் நாடக
த்து விளைவோ
பாட்டுக்குப் பொருள் தேடி அலைந்தே
பதிவிட்ட போது உள்ளமே ஊற்றானது
தோண்டத் தோண்ட ஊற்றாய் சுரந்திடும்
தேங்கிக் கிடக்கும் ஆழ் மனதில்
நீயும் எழுதலாம் நிதமும் எழுதலாம்
காயங்கள் கனவுகள் கற்பனை கலந்தால்
காவியம் படைக்கலாம் கவிஞனும் ஆகலாம்
ஓவியம் தீட்டலும் ஒருசிலை வடித்தலும்
புத்தியைத் தீட்டும் கூர்மை அறிவாலே
சிந்தனை செய்திடு சிற்பியாய் மாறலாம்

கருத்துகள் இல்லை: