வெள்ளி, 27 செப்டம்பர், 2019

நிலாப் பெண்ணே

எத்தனை ஆண்டுகளாய் உனைத் தேடி நின்றேன்
எங்கே நீயென்று அலைந்து திரிந்தேன்
இருளிலும் ஒளியிலும் இரவிலும் பகலிலும்
கடும் மழை பனிப் பொழிவு இவைகளும் கடந்தேன்
மதிமுகம் கண்டிட‌ மதிகெட்டு அலைந்தேன்
மலர்ந்த உன்சிரிப்பின் மறுபக்கம் தேடினேன்
யாரும்‌ பார்த்திராத ஒருமுகம் ஒளித்தாய்
சொல்லித்தானே வந்தேன் யாருமறியா இரவின்துணையில்
சொக்கிப் போனேன் இரண்டே மைல்கல்
சொந்தமாய் என்னை அணைத்திடு வாயென
என்னவாயிற்று மாயாவிப் பெண்ணே உன்நிலை
ஏற்றுக் கொள்ளாமல் எங்கே மறைந்தாய்
உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உயிரோடு உனது வாசலில் இருப்பேன்
நீயும் நானும் கலந்து பரந்தவெளியில்
நிலாவென உலகம் படைப்போம் தலைநிமிர்வோம் !

கருத்துகள் இல்லை: