வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கூப்பாடு, வரலாறு,சமுதாயம்

ஏண்டா செவலை என்ன சொன்னாலும் கேக்காதோ
மாண்ட‌‌ விசயத்த பேசிப்பேசி நேரம்தான் விரயம்
ஆண்ட ‌அவன் செத்து நூறாறு வருசமாச்சு
தோண்டிப் பாக்க இதுவென்ன கேணித் தண்ணியா
திராவிடனோ ஆரியனோ இசுலாமியனோ கிறித்தவனோ சீக்கியனோ
யாருக்கும் இந்த நிலம் சொந்தமில்வே நாடோடிகளே
ஒண்டிப் பிழைக்க காடுமேடேறி வந்தவங்க
ஒனது எனதுனு பேசுறது எதுக்கு வீணா
போனது போனது தான்மக்கா திரும்ப வாராது
மானம் மரியாத காப்பாத்த மனுசனா இருந்துக்க
கூப்பாடு போட்டு ஊரக்கூட்டி வேசம் எதுக்கு
கூட்டுலே ஆவிபிரிஞ்சா மண்ணா சாம்பலாத் தான்போவே
வரலாறு விட்டுபுட்டு வருங்காலம் பத்தி யோசி
வானத்த ஊடுருவு வாழுமிடம் தேடி வளம் சேரு
வார்த்தைலே வன்மம் வேணா உண்மை நிக்கட்டும்
கூட்டா இருக்க கத்துகிட்டா மாத்தம் வரும்
கூறுபட்ட சமுதாயம் ஒன்னுசேரும் வளம் கொழிக்கும்

கருத்துகள் இல்லை: