வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மனிதம்காத்து மற்றவை மறந்திடு

மனிதம் என்றொரு‌ நிலையுண்டு
மக்களைக் காக்க வருவதுண்டு
புயலின் சீற்றம் அழிவின்போது
புரண்டோடும் வெள்ள அபாயத்தின்போது
சாதிமதங்கள் சாக்கடை நீரிலப்போது
சாத்திர சம்பிரதாயம் இல்லையப்போது
தீண்டத் தகாதவர் எவருமில்லை
தீட்டும் இல்லை சகுனமுமில்லை
வாழ்ந்திட மட்டுமே வழிதேடு
வர்ணங்கள் ஆயிரம் எதற்கிங்கே
எத்தனை வளர்ச்சி எந்திரவேகம்
எங்கே போனது மூளைவளர்ச்சி
பித்தம் பிடித்து அலையும்மனிதா
பிறவியொன்றே பிரித்தாளுதல் விட்டுவிடு
உரக்கச் சொல்வேன் உணரந்திடு
மனிதம்காத்து மற்றவை மறந்திடு

கருத்துகள் இல்லை: