வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மயக்க நிலை

ஏனோ வானிலை மாறுது
ஏதோ ஒன்று சரியில்லை
சரிவு இது தெரிகிறது
சரித்திரம் தவறாக மாறுகிறது
பார்வை தெரிந்தும் குருடனாய்
நேர்மை தொலைத்த அறிவிலியாய்
விழுந்தவன் எழவே இல்லை
வியப்பாய் செயல் எல்லாம்
சவக்குழிப் பிணங்கள் சந்தையில்
சாத்திரம் பேசித் திரிகின்றன
மயக்க நிலையில் நாட்டினர்
மருந்தொன்று இல்லை இதற்கு
ஒற்றுமை கூறு போட்டு
ஒவ்வொரு தெருமுனையில் விலைக்கு
கடவுளர் செய்வதறியாது கல்லாய்
கள்வர்கள் கடவுளாய் பீடத்தில்
பொடிவைத்த வார்த்தைகள் புரியுமா
பொருள் தெரிந்தவர் புகலுவர்‌!

கருத்துகள் இல்லை: