வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இரண்டு காட்சிகள்

வானம் பொத்துகிட்டு ஊத்துதடா
வயலெல்லாம் வெள்ளத்துலே மூழ்குதடா
காஞ்ச நிலத்துலே ஈரமில்லேடா
கால்குடம் தண்ணிக்கும் தவிக்குதடா
இரண்டு காட்சிகளும் காணுதடா
இருப்பதோ ஒரேநாட்டுல தான்டா
ஆறெல்லாம் கரைபுரண்டு ஓடுதடா
ஆனாலும் ஏரியிங்கே காயுதடா
ஆர்செய்த குத்தமிது சொல்லுங்கடா
ஆண்டு பலவாச்சு யோசிங்கடா
ராக்கெட்டு செவ்வாய்க்குப் போச்சுடா
பக்கெட்டு நீருக்கு வழியில்லடா
வானத்துலே தேடறது இருக்கட்டும்
வறண்டு போகாதநீரும் வேண்டுமடா
கோரிக்கை வச்சுபுட்டேன் உனக்கிங்கே
சேரிக்கும் நீர்கொண்டு சேத்துடு !

கருத்துகள் இல்லை: