வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இயற்கை அழகு

ஆத்துலே வெள்ளம் கரை புரண்டு போகுது
ஆடையை தோள்மேலே போட்டு போறாளே பொன்னி
அசைந்தாடி நடந்து போவையிலே கொலுசு குலுங்குதடி
அன்னநடையோ அழகுச் சிலையோ ஆராயும் கண்கள்
படித்துறையிலே பக்கத்து வீட்டுமாமி கோடிவீட்டு கோகிலா
பலவண்ணத் துணிகளை சவுக்காரம் போட்டபடி பத்மா
பாவாடையை மார்போட உசத்திக் கட்டிய பார்வதி
விடிஞ்சும் விடியாத காலைப் போதிலே கோயில்மணி
விநாயகர் துதிபாடி அவனப்பன் சிவனையும் வணங்கி
கோலமிட்ட தெருவெங்கும் பூசணிப்பூ மாட்டுச் சாணம்
கோடியிலே டீக்கடை பெஞ்சிலே நாட்டாமை நாளிதழோட
இரம்மியமா விடிகிற கிராமத்துக் காலைப் போது
இயற்கை அழகுக்கு ஈடில்லை இங்கேதான் வாழவேண்டும்

கருத்துகள் இல்லை: