வெள்ளி, 27 செப்டம்பர், 2019

வாழ்க்கை புரியவில்லை

சூலுற்ற பெண்ணுக்குச் சுமையில்லை பிள்ளை
தோளுக்கு வலியில்லை சாய்ந்திடும் தலையால்
போருக்குப் போகும் வீரர்க்குப் பயமில்லை
காதலுற்ற பெண்டிருக்கு கணமேனும் உறக்கமில்லை
நட்பென்று வந்தாலே சாதிமதம் பார்ப்பதில்லை
வாழும் நாட்களிலே வாழ்வியல் புரிவதில்லை
கல்லூரிக் காலத்தில் சூத்திரங்கள் தெரிவதில்லை
மூடநம்பிக்கை மூளைக்குள் ஆராய்ந்து பார்ப்பதில்லை
கயவர்க்கும் கொலைஞருக்கும் மனச்சாட்சி இருப்பதில்லை
அரசியல் வர்த்தகர்கள் நமக்காய் உழைப்பதில்லை
பிரித்தாளும் உள்ளங்கள் இன்றும் மாறவில்லை
இறைவன் பெயராலே ஏய்த்தலும் நிற்கவில்லை
எதுதான் வாழ்க்கையென்று எனக்கும் புரியவில்லை

கருத்துகள் இல்லை: