திங்கள், 22 ஏப்ரல், 2019

பெண் தவசி

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
கன்று ஈனும் தாயாக அவள்
அன்னை சகோதரி நண்பி மனைவி
அனைத்தும் அவளே அன்பின் உறைவிடம்
பெண் என்றாலே பேணிக் காப்பவள்
பெற்ற தாய் இறையினும் மேலாய்
தன்நலம் நோக்கா தாய்மைப் பண்பு
அன்றும் இன்றும் அயராத உழைப்பாளி
துவண்ட போது அவள் மடியே
துயர் துடைக்கும் போதி மரம்
பெண் என்பதே பொறுமையின் பிறப்பிடம்
ஆணை வழிநடத்தும் வாழ்க்கைப் பாதை
சொல்லில் அடங்கா சோர்விலா தவசி
சொற்கள் போதாது சொல்லிடப் பெருமை !

கருத்துகள் இல்லை: