ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
கன்று ஈனும் தாயாக அவள்
அன்னை சகோதரி நண்பி மனைவி
அனைத்தும் அவளே அன்பின் உறைவிடம்
பெண் என்றாலே பேணிக் காப்பவள்
பெற்ற தாய் இறையினும் மேலாய்
தன்நலம் நோக்கா தாய்மைப் பண்பு
அன்றும் இன்றும் அயராத உழைப்பாளி
துவண்ட போது அவள் மடியே
துயர் துடைக்கும் போதி மரம்
பெண் என்பதே பொறுமையின் பிறப்பிடம்
ஆணை வழிநடத்தும் வாழ்க்கைப் பாதை
சொல்லில் அடங்கா சோர்விலா தவசி
சொற்கள் போதாது சொல்லிடப் பெருமை !
கன்று ஈனும் தாயாக அவள்
அன்னை சகோதரி நண்பி மனைவி
அனைத்தும் அவளே அன்பின் உறைவிடம்
பெண் என்றாலே பேணிக் காப்பவள்
பெற்ற தாய் இறையினும் மேலாய்
தன்நலம் நோக்கா தாய்மைப் பண்பு
அன்றும் இன்றும் அயராத உழைப்பாளி
துவண்ட போது அவள் மடியே
துயர் துடைக்கும் போதி மரம்
பெண் என்பதே பொறுமையின் பிறப்பிடம்
ஆணை வழிநடத்தும் வாழ்க்கைப் பாதை
சொல்லில் அடங்கா சோர்விலா தவசி
சொற்கள் போதாது சொல்லிடப் பெருமை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக