திங்கள், 22 ஏப்ரல், 2019

காத்திருப்போம் !

என்னை உறங்க விடு எப்படியோ போகட்டும்
பாட்டனும் பூட்டனும் பெற்ற சுதந்திரம் பாழாகப் 
போகட்டும்
ஊர் இரண்டு படட்டும் சாதிவெறி வளரட்டும்
பெருந்தலைவர் என்ன பெரியாரென்ன மூடநம்பிக்கை வாழட்டும்
வெட்டி மடியட்டும் வெறும் குருதி ஓடட்டும்
நீருக்கும் நிலத்துக்கும் பேசும் மொழிக்கும் போரிடட்டும்
தீண்டாமை வன்கொடுமை வஞ்சகம் வாய்ச்சவடால் பரவட்டும்
யாருக்கு வேண்டுமிந்த சுதந்திரம் சுயமரியாதை
வெள்ளைக்காரனோ வேலைக்காரனோ எவனோ ஆளட்டும்
வேடிக்கை பார்க்கவும் கைகட்டி நிற்கவுமே நாங்கள்
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் மீது
இன்னொரு காந்தியும் கோட்சேவும் வரும்வரை காத்திருப்போம் !

கருத்துகள் இல்லை: