திங்கள், 22 ஏப்ரல், 2019

தமிழ்த்தாயே

எத்திசையும் புகழ் மணக்க வந்த தமிழ்த்தாயே
புத்துயிர் பூக்கும் என்றும் உன் மொழி கேட்டு
மூப்பில்லாத உன் இளமை வியந்தோம் தொழுதோம்
மூவிலக்கியமாய் மூச்சுக் காற்றில் எம்முடன் நீ
கடலினும் ஆழம் மூழ்கி திரவியங்கள் கண்டோம்
கற்றவை கடுகளவே காலமெலாம் போதாது உனைஅறிய
என்றும் எம்நாவில் இனிமை சேர்ப்பாய் தாயே
உன்அமுது உள்வாங்கி உயிர்த் திருப்போம் யாமே

கருத்துகள் இல்லை: