நான் அரசியல் வியாதி
நாட்டுக்காய் உழைப்பதாய் பொய்யுரைப்பேன்
ஓட்டுக்காய் பலவேடம் கொள்வேன்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை
பந்தம் வரும் என்வாழ்வில்
மக்கள் என் தெய்வங்களாவர்
மனசாட்சி தலைதூக்கும் தர்மம்பேசும்
மாற்றுக் கட்சியினர் உறவினராவர்
பாலாறு தேனாறு ஓடுமென்பேன்
பாமரரோடு தோள் சேர்ப்பேன்
வறியவர் இப்போது கண்முன்
வாரி வழங்கிட அரசுகஜானா
கூட்டங்கள் கோஷங்கள் கொடிகள்
கூழைக் கும்பிடு பொய்ச்சிரிப்பு
தேர்தல் வந்தாலே தேனாய்ப்பேச்சு
தேடிப்போய் குடிசைக் கூழ்
ஆடிடும் நாடகம் அரங்கேறும்
பரத்தையினும் கீழாய் பதவிக்காய்
பலவும் செய்வேன் பண்பாளன்நான் !
நாட்டுக்காய் உழைப்பதாய் பொய்யுரைப்பேன்
ஓட்டுக்காய் பலவேடம் கொள்வேன்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை
பந்தம் வரும் என்வாழ்வில்
மக்கள் என் தெய்வங்களாவர்
மனசாட்சி தலைதூக்கும் தர்மம்பேசும்
மாற்றுக் கட்சியினர் உறவினராவர்
பாலாறு தேனாறு ஓடுமென்பேன்
பாமரரோடு தோள் சேர்ப்பேன்
வறியவர் இப்போது கண்முன்
வாரி வழங்கிட அரசுகஜானா
கூட்டங்கள் கோஷங்கள் கொடிகள்
கூழைக் கும்பிடு பொய்ச்சிரிப்பு
தேர்தல் வந்தாலே தேனாய்ப்பேச்சு
தேடிப்போய் குடிசைக் கூழ்
ஆடிடும் நாடகம் அரங்கேறும்
பரத்தையினும் கீழாய் பதவிக்காய்
பலவும் செய்வேன் பண்பாளன்நான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக