திங்கள், 22 ஏப்ரல், 2019

அரசியல் வியாதி

நான் அரசியல் வியாதி
நாட்டுக்காய் உழைப்பதாய் பொய்யுரைப்பேன்
ஓட்டுக்காய் பலவேடம் கொள்வேன்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை
பந்தம் வரும் என்வாழ்வில்
மக்கள் என் தெய்வங்களாவர்
மனசாட்சி தலைதூக்கும் தர்மம்பேசும்
மாற்றுக் கட்சியினர் உறவினராவர்
பாலாறு தேனாறு ஓடுமென்பேன்
பாமரரோடு தோள் சேர்ப்பேன்
வறியவர் இப்போது கண்முன்
வாரி வழங்கிட அரசுகஜானா
கூட்டங்கள் கோஷங்கள் கொடிகள்
கூழைக் கும்பிடு பொய்ச்சிரிப்பு
தேர்தல் வந்தாலே தேனாய்ப்பேச்சு
தேடிப்போய் குடிசைக் கூழ்
ஆடிடும் நாடகம் அரங்கேறும்
பரத்தையினும் கீழாய் பதவிக்காய்
பலவும் செய்வேன் பண்பாளன்நான் !

கருத்துகள் இல்லை: