திங்கள், 22 ஏப்ரல், 2019

களை எடுப்போம்

பேதமை அழிந்து பெருமனிதர் ஆவீரோ
வேதனை வர்ணங்கள் வெந்து போகுமோ
காகங்கள் நாய்கள் சாதிகள் பார்க்குமோ
மோகத்தீயே. இதுவும் அணைத்திடு மனிதா
பாரதி அவன்தாசன் பாடியது காணீரோ
பாசத்தில் நேசத்தில் பண்பில் உயர்வீரோ
நெல்லுக்கு மட்டுமே நீர் வேண்டும்
புல்லைப் பிடுங்கி களை எடுப்போம்
காலம் நிச்சயம் மாற்றி விடும்
காலன் வரும் நாளில் சமமாகும்
வீணுக்குப் பேசி விலை போகாதீர்
விண்ணில் ஓர் உலகம் உருவாகும்

கருத்துகள் இல்லை: