திங்கள், 22 ஏப்ரல், 2019

சொற்களில் உண்மை

ஒற்றை ரோசாவில் காதல் சொல்வேன்
ஒன்றே குலமென்று வாதம் செய்வேன்
கற்றது கேட்டது கவிதை சொல்வேன்
பெற்றது தாயென பெருமை கொள்வேன்
பேதமை ஒழித்தவர் பெரியோரே என்பேன்
பெறுதற்கு அரிதாம் நட்பென்றே பகர்வேன்
போதனை செய்தவன் ஆசான் ஆவான்
வேதங்கள் ஓதியவன் குருவென்று கொள்வேன்
சாத்திரம் சத்தியம் காந்தியம் ஏற்பேன்
கோத்திரம் இல்லா சமுதாயம் மதிப்பேன்
சொல்லிடும் சொற்களில் உண்மை இருப்பின்
சொக்கனே நீயென வணங்கி நிற்பேன் !

கருத்துகள் இல்லை: