திங்கள், 22 ஏப்ரல், 2019

என் கருத்துக்கள்

ஓர் ஐம்பத்தைந்து வருடங்கள் பின்னோக்கிப் போகலாம்
காமராசர்,பக்தவச்சலம் தலைமையிலான ஆட்சி நன்றாகவே நடைபெற்றுக் கொண்டிருந்ததது. அப்படியிருந்தும் மாற்றத்தை ஏன் மக்கள் விரும்பினர்.
காலம் காலமாய் சாதி வெறியும் தீண்டாமையும் தலைவிரித்தாடிய நேரம். சுதந்திரத்திற்குப் பிறகு யாரும் அதனை பெரிதாகக் கொள்ளவில்லை.
ஆங்கிலேயர் காலம் முதலே உயர் பதவிகளில் பெரும்பாலும் அந்தணர்களே கோலோச்சினர். உண்மையில் மற்ற சாதியினரின் பிள்ளைகள் வாய்ப்பின்மையால் மேல் படிப்பிலும் தொழில் படிப்பிலும் முன்னேற இயலவில்லை.
பெரியாரின் தலைமையில் மாற்றத்தைக் காண திராவிடம் பிறந்தது. உடனடி தீர்வுக்கு அறுவை சிகிச்சையே தீர்வு என தீர்மானித்து அவர் தீவிர அந்தணர் எதிர்ப்பிலும் கடவுள் மறுப்பிலும் ஈடுபட்டார். மக்களின் மீதுள்ள மாய வலையை அறுத்தெரிய வழியாக அது உருவாயிற்று.
பின்னாளில் பிறந்த திராவிடக் கட்சிகள் பிற்பட்ட சாதியினர் முன்னேறவும்,வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோர் முன்னேறவும் பல‌நல்ல திட்டங்கள் கொண்டு வந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஊழல் செய்வதும் கூடவே வளர்ந்தது.
காங்கிரசும் திராவிடமும் தீயவை மட்டுமே செய்தனர் என்பது அப்பட்டமான பொய். அதே போல் அவர்களது சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுபதாண்டுகளுக்குப் பிறகு பேசுவது நியாயமல்ல. அதுவல்ல தீர்வு. எப்போதோ நடந்து முடிந்த விசயங்களை இப்போது ஆராய்வதில் எந்த பயனுமில்லை.
நடக்க வேண்டிய நாட்டு முன்னேற்றம் பற்றி கவலைப்படுவதை விட்டு சாதி மத வேறுபாடுகளை மேலும் மேலும் பேசிக் கொண்டிருப்பது தேவையற்றது.
முன்னேற்றம் என்பது எல்லா மட்டத்திலும் எல்லாத் துறைகளிலும் சமமாக செயல் பட வேண்டும்.
இனியேனும் சிந்தனை மாற்றம் வந்தால் நலம். பிரித்தாள நினைப்பது புரட்சி எனும் பூகம்பம் தோன்ற வழி வகுக்கும்

கருத்துகள் இல்லை: