திங்கள், 22 ஏப்ரல், 2019

தாய்த் திருநாட்டின் புதல்வர்

எல்லைகள் காத்திடும் வீரர்
எதற்கும் அஞ்சா தீரர்
உயரப் பறந்து கழுகாய்
கயவர் கூடாரம் காண்பர்
பாய்ந்து சென்று தாக்கி
பகைவர் பாசறை அழிப்பர்
நெஞ்சில் உறுதி வீரம்
நெருப்பென க
ண்களின் தீரம்
எல்லை தெய்வமாய் அவரே
என்றும் நம்மைக் காப்பர் !
காடுகள் மலைகள் கரடுமுரடாய்
கால்கள் கடுக்க கடப்பர்
கடமை ஒன்றே மனதில்
கணமேனும் கண்கள் அசரார்
நீர்நிலம் வான்என மூன்றாய்
நீண்ட எல்லை இவரது
தன் நலம் துறந்த தியாகம்
தாய்த் திருநாட்டின் புதல்வர்
எண்ணில் அடங்கா சாகசம்
எதிரிகள் எல்லைகள் கடந்து
என்றும் இவர்தம் சாதனை
எம் மனதில் கொள்வோம்
அவர்தம் தேசபக்தி
அனைவரும் போற்றி வணங்குவோம் !

கருத்துகள் இல்லை: