திங்கள், 22 ஏப்ரல், 2019

காத்துக் கிடக்கும் கண்கள்

பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு பூசை செய்
காத்துக் கிடக்கும் கண்களுக்கு கருணை செய்
பாத்துக் கிடக்கும் பார்வைக்கு பரிசு தா
நாத்து நடவையிலே பாத்த உன்னை 
நேத்து வரை காணலியே எங்கே போனே
நீ நட்ட நாத்து கூட பூத்திடுச்சு
ஏர் பூட்டி உழுத நாளும் போயாச்சு
நெல் மணி கதிரறுக்கும் நாளும் வந்திடுமே
நெஞ்சைக் குளிராக்க நீ எப்ப வருவே
பொங்கப் பானை வச்சு புத்தரிசி போட
பெண்ணே நீதானே வரணும் கழனிமேட்டுக்கு
காத்திருக்கேன் பலநாளாய் பரிதவிச்சு நானே
காலம் கடத்தாம காலையிலே வந்துசேர் !

கருத்துகள் இல்லை: