திங்கள், 22 ஏப்ரல், 2019

உப்புமா சமையல்

ரவையை வறுத்து வைத்து
மல்லி மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை
கடுகு உளுந்து கடலைப்பருப்பு உப்பு
கடலெண்ணெய் வாணலியில் காயவைத்து 
அதில் பொரியவைத்து
நீரூற்றி உப்பை அளவோடு போட்டு 
கொதிக்கின்ற நேரமதில் வறுத்த ரவையை
அதனில் போட்டு கிளறி சிறிது நேரம்
மூடியிட்டு மூடி வைத்து கூடவே
தேங்காய் மிளகாய் மல்லி கடலை அரைத்து
உப்பு சேர்த்து தாளிதம் ஊற்றி கலந்து
வெந்த உப்புமாவோடு சட்னி கலந்து
சப்புக்கொட்டி சாப்பிட்ட நேரம் நண்பன் வர
ஹாட்பேக்கில் அவனுக்கும் கொடுக்க
அவன் சாப்பிட்டுப் போன் போட்டுப் பாராட்ட
யார் சொ
ன்னது உப்புமா சுவையில்லை என
இத்தனையும் கலந்தாலே சுவையான விருந்தாமது

கருத்துகள் இல்லை: