திங்கள், 22 ஏப்ரல், 2019

தூதுசெல்வீரா?

ஆடி வரும் காற்றினிலே அசைந்தாடும் மூங்கிலே
ஆலமரக் குயில் ஓசை கேட்டாயோ
நதியோர‌ நாணல் பெண்ணே நாணித் தலைகுனிந்தாயோ
பதியாக வருவான் குளிரூட்ட தென்றல் காதலனவன்
ஓயாத அலைமகளே ஓடிநிதமும் கரைசேர்வாயோ
ஓடிவருவானோ கட்டி அணைப்பானோ கள்வன் கதிரோனே
மலை மகளே யாருக்காய் உயர்ந்து நிற்பாயோ
மாலையில் வருவானோ முகிலவன் தழுவிடுவானோ
மலர்க்கூட்ட மங்கையரே மயக்கம் ஏனோ உமக்கிங்கே
உம்உதட்டில் வண்டவன் தேன் பருகிச் செல்வானோ
வெள்ளிப் பனிநீராய் வீழும் அருவி அணங்கே
உன்உடல் பட்டு சிறுகச் சிறுக மணலானான் உன் பாறைக்காதலன்
நீவிரெல்லாம் காதல் கொண்டீர் களித்திருப்பீர்
பாவியனானேனோ என்துணை கண்டீரா தூதுசெல்வீரா?

கருத்துகள் இல்லை: