திங்கள், 22 ஏப்ரல், 2019

விடிவதெப்போது

கனியொன்றைக்‌ கொடுத்து சுவைக்கச்
சொன்னேன்
இனிப்பு நாவில் படுமுன்னே பறவைக்குப் பறி் 
கொடுத்தான் 
அமுதக் கலசம் தந்து பருகச் சொன்னேன்
ஆலகால விஷமாய் மாற்றி நீரில் கலந்தான்
காதுக்கு இனிமையாய் கானம் தந்தேன்
காகத்தின் குரலாய் மாற்றி நின்றான்
உயிர் மூச்சுக் காற்றைத் தந்தேன்
உதவாத நச்சுக் காற்றாய் மாற்றி விட்டான்
நல்ல வாழ்வுக்கு வழிகள் பல சொன்னேன்
நடைப் பிணமாய்ப் பாதைமாறி பரிதவித்தான்
நல்லவை வைத்து தீயவை தவிர்க்கும்
நற்குணம் மறந்தான் நசித்துப் போனான்
விழிக்க மறுத்து விட்டில் பூச்சியானான்
விடிவதெப்போது விடைகாண இயலவில்லை

கருத்துகள் இல்லை: