வெள்ளி, 1 நவம்பர், 2019

தன்னலமற்ற நட்பு

என்ன நண்பா எழுந்தாயா உறக்கம் கலைந்தாயா
எத்தனை முறை தூக்கம் தொலைக்க வைத்தாய்
இருந்தாலும் உன் மீது கோபமில்லை சிரிப்பேன்
இருக்கிறேன் உனக்கென்ற வாஞ்சை அதில் தெரியும்
கண்ணயரும் நேரத்தில் சில நேரம் உன்னழைப்பு
கவிதை எழுதும் நேரமதில் கைபேசி அழைப்பு
திரைக்காட்சி அரங்கினில் பலநேரம் பவ்யமாய் சொல்லவைப்பாய்
திரையிட்ட கண்ணீரை வார்த்தைகளால் வடியச் செய்வாய்
எங்கிருந்து வந்தாயோ என் துணயாய் நீயே
எதிர்பார்ப்பு இல்லா உறவென்றால் இதுவே ஆகும்
தவம் செய்தாலும் கிடைக்காது 


தவற விடமாட்டேன் தரணியில் நானிருக்கும் நாள்வரையில் !

கருத்துகள் இல்லை: