என்ன நண்பா எழுந்தாயா உறக்கம் கலைந்தாயா
எத்தனை முறை தூக்கம் தொலைக்க வைத்தாய்
இருந்தாலும் உன் மீது கோபமில்லை சிரிப்பேன்
இருக்கிறேன் உனக்கென்ற வாஞ்சை அதில் தெரியும்
கண்ணயரும் நேரத்தில் சில நேரம் உன்னழைப்பு
கவிதை எழுதும் நேரமதில் கைபேசி அழைப்பு
திரைக்காட்சி அரங்கினில் பலநேரம் பவ்யமாய் சொல்லவைப்பாய்
திரையிட்ட கண்ணீரை வார்த்தைகளால் வடியச் செய்வாய்
எங்கிருந்து வந்தாயோ என் துணயாய் நீயே
எதிர்பார்ப்பு இல்லா உறவென்றால் இதுவே ஆகும்
தவம் செய்தாலும் கிடைக்காது
தவற விடமாட்டேன் தரணியில் நானிருக்கும் நாள்வரையில் !
எத்தனை முறை தூக்கம் தொலைக்க வைத்தாய்
இருந்தாலும் உன் மீது கோபமில்லை சிரிப்பேன்
இருக்கிறேன் உனக்கென்ற வாஞ்சை அதில் தெரியும்
கண்ணயரும் நேரத்தில் சில நேரம் உன்னழைப்பு
கவிதை எழுதும் நேரமதில் கைபேசி அழைப்பு
திரைக்காட்சி அரங்கினில் பலநேரம் பவ்யமாய் சொல்லவைப்பாய்
திரையிட்ட கண்ணீரை வார்த்தைகளால் வடியச் செய்வாய்
எங்கிருந்து வந்தாயோ என் துணயாய் நீயே
எதிர்பார்ப்பு இல்லா உறவென்றால் இதுவே ஆகும்
தவம் செய்தாலும் கிடைக்காது
தவற விடமாட்டேன் தரணியில் நானிருக்கும் நாள்வரையில் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக