வெள்ளி, 1 நவம்பர், 2019

தூர தேசத்துலே

அம்மையப்பனோ ஆண்டவனோ
அடுக்களையில் புகைநடுவில்
அரிசிச்சோறு ஆக்கியவளோ
ஆத்தா அவளோ. பெத்தவளோ
ஆராரோ பாடித் தொட்டிலிலே
அமைதியா தூங்க வைத்தவளோ
அணைத்தவளோ அமுதூட்டியவளோ
அழுதாக்கா பாக்கப் பொறுக்காத
அம்மாவுக்கு பாசம் பெருசப்பா
ரத்தத்த பாலாக்கி ஊட்டிவளத்தாளே
ரவநேரம் யோசிச்சுப் பாத்தாயா
உனக்கொன்னு வந்தாளே உசுரவிடுவா
உசரமா வளந்தாலே உறவும் அறுபடுமோ
உன்ன வளத்தவள தவிக்கவிட்டு
ஊரூராப் போனாயே உசிதம்தானா
ஊசலாடுதய்யா உறவத்த அவமூச்சு
தூரதேசத்துலே நீசேத்த சொத்து
பாரமான மனசுக்கு ஆறுதல தாராது

கருத்துகள் இல்லை: