வெள்ளி, 1 நவம்பர், 2019

சிறுகவி

பந்தமோ சொந்தமோ வந்ததோ சென்றதோ
எந்தையும் தாயும் என்னுயிர் தந்தனரோ
வந்தனம் தந்துநான் வணங்கிடும் குருமாரே
நொந்திடும் மனம் தேடும் நெருங்கிய மனமொன்றை
வந்திடும் வாழ்வினில் வசந்தம் மாறிமாறி
மந்தமாய் இருந்திடாமல் மகிழ்வுடன் புன்னகைப்பாய்
சந்தம் இல்லாக் கவிதையில் சத்தில்லை
சந்திப் பிழையின்றி தமிழ் பயிலுவோமா
சிந்தனை செய்தே சிறுகவிதை படைத்தேனே
நிந்தனை செய்யாமல் நினைவில் கொள்வீரா
துந்தனாப் பாடும் சிறுகவி நானேதான்
பாந்தமாய் பண்ணிசைக்க பாடலாய் வந்திடுமோ

கருத்துகள் இல்லை: