வெள்ளி, 1 நவம்பர், 2019

முதல் காதல் (பாகம் 2)

மறுநாள் சீக்கிரமே முழிப்பு வந்துச்சு. மனசு படபடப்பு அடங்கலே. குளிச்சு ரெடியாகி பின்வீட்டு கிருஷ்ணன் மாமா சைக்கிள் இரவல் வாங்கிட்டு கோயில் இருக்கிற ஃபிளவர்ஸ் ரோட்டுக்கு கரெக்ட் டைம் போய் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திட்டு வெயிட் பண்ணேன்.
கொஞ்ச நேரம் ஆச்சு எனக்கு டென்சன் அதிகமா ஆகிட்டே இருக்கு. சுமார் பதினைந்து நிமிஷ காத்திருப்புக்கு அப்புறம் அவள் வந்தா. இதயத்துடிப்பு ஸ்பீக்கர்லே போட்ட மாதிரி லப்டப் சவுண்டு.
கிட்டே வந்து சாரிங்க லேட்டாச்சுன்னு சொல்லிட்டு நல்லாருக்கீங்களானு கேட்டது எங்கேயோ தூரத்து குரல் மாதிரி கேக்குது. எனக்கு தொண்டைலே இருந்து வார்த்தைங்க வரவே நேரமாகுது. நல்லாருக்கேன் ஒற்றை வார்த்தை மட்டும்.
வாங்க போலாம்னு கோவில நோக்கி நடக்கறா. நான் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி. பூசாரி காட்டுற தீபம். கடவுள் சிலை எதுவும் தெரிலே எனக்கு.
அவ கைய நீட்டி விபூதி எடுத்துக்கங்க சொல்றப்ப அசரீரி மாதிரி கேக்குது. விபூதி நெத்திலே வைச்சுக்கறேன்.
இப்பவும் அவ முகத்த சரியாப் பாக்காமலே பாரீவை வேறெங்கேயோ. அப்பதான் அவ என் கையில அந்த காகிதப் பொட்டலம் கொடுக்கறா. வீட்டுலே போய் பிரிச்சுப்பாருஙகனு சொல்றா. நான் தலையாட்டி படிலே அவளோட கீழே இறங்கறேன். நான் வரேன் வீட்டுலே தேடுவாங்கனு சொல்லிட்டுக் கிளம்பறா. அவ போறத பாத்துகிட்டு கொஞ்சநேரம் நின்னுட்டு பொட்டலத்த பேன்ட் பாக்கெட்லே போட்டுகிட்டு சைக்கிள எடுத்துட்டு ஏதோ மாயலோகப் பயணம் மாதிரி வீட்டுக்குத் திரும்பறேன்.
வீடு வந்து சேர்ந்து பெட்ரூமுக்குள்ளே போய் பொட்டலத்த பிரிச்சா உள்ளே இருந்த பொருள் புரியவே இல்ல.
(இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை: