வெள்ளி, 1 நவம்பர், 2019

சகோதரம்

கறை அற்ற வாழ்வு வேண்டி
இறை தொழல் நன்றே தினமும்
குறை யாவும் போக்கி குணமாகவும்
மறை கூறும் நன்னெறிகள் உதவும்
நிறைவான மனதோடு வேண்டி நிற்க
நிம்மதி நிலவிடும் நினைவினில் கொள்வீரே
உள்ளத்து உறையும் நல்வினை யாவும்
உயர்வான வாழ்வுக்கு உறுதுணை ஆகும்
கற்றலும் கேட்டலும் நல்லவை ஆகிடின்
பெற்றிடும் அமைதி மனமே பெருந்தகையோரே
வந்தவர் எல்லாம் சென்றிடும் நாளில்
வாழ்க்கைக் கணக்கில் பெருகிடும் புகழே
வாழ்வதே ஒருமுறை நடுநிலை கொள்வோம்
வாதங்கள் தவிர்த்து சகோதரம் வளர்ப்போம்

கருத்துகள் இல்லை: