வெள்ளி, 1 நவம்பர், 2019

இரத்தமில்லா சுதந்திரம்

உத்தமர் வாழ்ந்த நாட்டில் உன்மத்தர்கள்
இரத்தமில்லா சுதந்திரம் வீதியில் குப்பையாய்
வேதாளம் மரமேறி சாத்திரம் பேசுகிறது
பாதாளம் நோக்கியே பயணம் பாவிகளால்
எதற்காகப் பெற்றாயோ சுதந்திரம் தந்தையே
எத்தர்கள் நாட்டினில் ஏளனம் பேசவா
புத்தனும் நீயும் போதித்தவை புத்தகத்தில்
புத்தி கெட்டோரே பீடத்தில் ஐயகோ
நாட்டுக்காய் உயிர் துறந்த உத்தமரே
நானிலத்து நன்மைக்கு வழியொன்று சொல்வாயா
அழிகின்ற சமுதாயம் தடுத்தாள என்செய்வேன்
பழியொன்றை உன்மீது சுமத்தும் பாதகர்கள்
மீண்டும் வந்திடு அகிம்சை வேண்டாம்
மிலேச்சரை களையெடுக்க ஆயுதம் வேண்டும்

கருத்துகள் இல்லை: