வெள்ளி, 1 நவம்பர், 2019

தீபாவளி

விடிந்தால் தீபாவளி விடியட்டும் நல்காலை
வெடிச்சத்தம் குறையுமுன்னே வேதனைகள் மறையட்டும்
புத்தாடை உடுத்தி தின்பண்டம் இனிக்கட்டும்
பொத்தான் இல்லாத சட்டைகளும்் புதிதாகட்டும்
நரகஅசுரன் இறந்தானோ தீவினைகள் அழிந்தனவோ
ஊரகம் வளரட்டும் ஊருணி பெருகட்டும்
தீபங்கள் வாசலெங்கும் ஒளிரட்டும் மனமகிழட்டும்
கோபங்கள் விடுத்து சொந்தங்கள் சேரட்டும்
உயரே வானவெடியின் வெளிச்சம் சிதறட்டும்
பயிரே உயிரென்ற உழவும் வளரட்டும்
இன்பம் பெருகிட இத்திரு நாளதனில்
இல்லாதோர் இல்லாத நாளொன்று வேண்டிடுவோம் !

கருத்துகள் இல்லை: