வெள்ளி, 1 நவம்பர், 2019

மனிதம்

தீயவை அழிந்து நல்லவை ஓங்கட்டும்
தூயவை மனதினில் நிறைந்து நிற்கட்டும்
பாவங்கள் மறைந்து பாரதம் செழிக்கட்டும்
கோபங்கள் விடுத்து சாந்தம் நிலவட்டும்
பேதங்கள் யாவும் மறைந்து ஒழியட்டும்
மதங்கள் சாதிகள் பிரிவினை விலகட்டும்
மனிதம் என்பது மட்டும் நிலைக்கட்டும்
புனித எண்ணங்கள் புவிதனை ஆளட்டும்
இறைவனும் இயற்கையும் இணைந்தே இயங்கட்டும்
மறைநெறி வழுவா வாழ்வே நிறையட்டும்

கருத்துகள் இல்லை: