வெள்ளி, 1 நவம்பர், 2019

கண்ணாமூச்சி

ஓடி விளையாட வருவாயா தோழியே
ஓயாமல் கதை பேசித் திரிவோமா
காதோரம் நீபேசும் இரகிசயங்கள் எனக்குமட்டும்
காக்கா கடிகடித்த கமர்கட்டு மிகஇனிப்பு
மாங்காய் பத்தையிலே மிளகாய்உப்பு நாக்கில்சுவை
தேங்காயில் வெல்லம் சேர்த்து உனக்கொன்று
மயிலிறகு புத்தகத்தில் எந்தப் பக்கம்
குயில்பாட்டு தோப்புநடை மறக்க முடியுமா
காதோரம் லோலாக்கு கொள்ளை அழகு்
கருங்கூந்தல் மல்லிகை வாசம் மதிமயக்கும்
எங்கே நீ போனாயடி தேடுகின்றேன்
எழுதாத காவியத்தின் நாயகியே நீதானே
ஊரெல்லாம் தேடித்தேடி ஓய்ந்து களைத்தேனே
கண்ணாமூச்சி ஆடும் வயதா இது
கடிதில் வருவாயா கண்ணோரம் நீர்த்துளிகள் !

கருத்துகள் இல்லை: