கனவுகளின் வரிகளில் காலை பூத்தது
நனவுகள் நகைச்சுவையாய் நண்பர்கள் மனங்களில்
அறுபதைக் கடந்த பின்னே நட்புக்கூடு
பெறுநல் பாக்கியம் உற்ற உறவுகள்
தனிமை போக்கிடும் தாலாட்டும் பாடிடும்
இனிமை வார்த்தைகள் இன்னலைப் போக்கிடும்
காலை மாலை இரவு நடுநிசி
காலம் பார்க்காது கருத்து பரிமாறும்
குரல்கள் உயரும் குசலம் கேட்கும்
விரல்களின் அசைவில் வித்தைகள் பலவும்
தவம் செய்தாலும் கிடைக்காத பந்தம்
தலை வணங்கி இதயம் சேர்ப்பேன்
நனவுகள் நகைச்சுவையாய் நண்பர்கள் மனங்களில்
அறுபதைக் கடந்த பின்னே நட்புக்கூடு
பெறுநல் பாக்கியம் உற்ற உறவுகள்
தனிமை போக்கிடும் தாலாட்டும் பாடிடும்
இனிமை வார்த்தைகள் இன்னலைப் போக்கிடும்
காலை மாலை இரவு நடுநிசி
காலம் பார்க்காது கருத்து பரிமாறும்
குரல்கள் உயரும் குசலம் கேட்கும்
விரல்களின் அசைவில் வித்தைகள் பலவும்
தவம் செய்தாலும் கிடைக்காத பந்தம்
தலை வணங்கி இதயம் சேர்ப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக