வெள்ளி, 1 நவம்பர், 2019

நட்புக்கூடு

கனவுகளின் வரிகளில் காலை பூத்தது
நனவுகள் நகைச்சுவையாய் நண்பர்கள் மனங்களில்
அறுபதைக் கடந்த பின்னே நட்புக்கூடு
பெறுநல் பாக்கியம் உற்ற உறவுகள்
தனிமை போக்கிடும் தாலாட்டும் பாடிடும்
இனிமை வார்த்தைகள் இன்னலைப் போக்கிடும்
காலை மாலை இரவு நடுநிசி
காலம் பார்க்காது கருத்து பரிமாறும்
குரல்கள் உயரும் குசலம் கேட்கும்
விரல்களின் அசைவில் வித்தைகள் பலவும்
தவம் செய்தாலும் கிடைக்காத பந்தம்
தலை வணங்கி இதயம் சேர்ப்பேன்

கருத்துகள் இல்லை: