வெள்ளி, 1 நவம்பர், 2019

கசடுகள் கலைந்திடு

நிரந்தரமற்றது வாழும் காலம்
நினைவில் இருத்தி வாழ்வோம்
நேற்றிருந்த நண்பன் இன்றில்லை
நாளை என்பது விடிந்தபின்னே
கூட்டைத் துறந்த உயிர்
கூற்றுவன் கணக்கின் முடிவே
தேடிய உறவை சேர்த்துவை
தேகம் அழியும் நாள்வரை
பிரிந்த பின்னே அழுதென்ன
புரிந்து இப்போதே வாழ்ந்திடு
நல்லதும் தீயதும் கணக்கிடு
நல்வினைத் தட்டு தரைதொட
உள்ளம் கசடுகள் கலைந்திடு
உண்மை இன்பம் தேடிடு
பிரிவுகள் அனைத்தும் தொலைத்திடு
பிரியும்போது சுமைகள் அவையாவும்
வாழ்ந்திடும் வாழ்வு ஒருமுறை
வன்மம் விலக்கி வாழ்வோமே !

( வகுப்புத் தோழனை இழந்து நிற்கிறோம் )

கருத்துகள் இல்லை: