வெள்ளி, 1 நவம்பர், 2019

முதல் காதல் (பாகம் 1)

வித்தியாசமான முதல் காதலை சொல்லுவோமானு தோணுச்சு. இப்பவும் சொல்லலேனா எப்படி.
அப்ப இஞ்சீனீயரிங் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருந்த நேரம். அம்மா இறந்து அஞ்சு வருசம். தங்கச்சி படிப்பு வரலேன்னு படிக்கலே. தம்பி ஸ்கூல் படிச்சுட்டு இருந்தான்.
முன்னாடி சொன்ன மாதிரி குவார்ட்டர்ஸ்லே கல்லூரிப் படிப்பு படிச்சவங்களே விரல் விட்டு எண்ணிடலாம். சுமார் நூத்தம்பது குடும்பம் மொத்தம்.
பாரத விலாஸ் மாதிரி பன்னண்டு வீடுங்கனு சொல்லி இருக்கேன். எதிர் வீட்டுலே மலையாளக் குடும்பம்.
நல்லா படிக்கிறேன்னு எல்லாருக்கும் என்ன பிடிக்கும். அம்மா இல்லாத பையன்னு சாஃப்ட் கார்னரும் உண்டு.
வீடு சிங்கிள் பெட்ரூம், சின்ன ஹால், கிச்சன், திறந்த டாப் பாத்ரூம்,டாய்லெட், வீ்டு நுழையற இடத்துல சின்ன வராந்தா இப்படித்தான் இருக்கும். பெரும்பாலும் இந்த வராந்தால தான் நான் படுத்துப்பேன். ஃபேன்லாம் அப்ப கிடையாது. மரத்தடி தான் படிக்கற இடம்.
இப்படியாக இருந்த ஒருநாள் ராத்திரி தூங்கி எழுந்து வழக்கம் போல பாயை மடிச்சுட்டே இருந்தப்ப கீழே படில ஒரு பேனா இருந்தது.
என்னோடது இல்ல அது. சரி யாரோடதோனு நினைச்சுகிட்டு மூடியைத்திறந்து பாத்தா நிப்போட இருக்கிற தலைய காணோம். என்னடானு இங்க் கொட்ட போதுனு உள்ளே பாத்தா பேப்பர்.
நான் பேப்பர கையில எடுக்கவும், எதிர் வீட்டு கதவு மூடற சத்தம் கேக்கவும் சினிமா போலவே. பேப்பர பிரிச்சா லெட்டர். என்ன சேத்துப்பட்டு ரெயில் ஸ்டேஷன்லே மீட் பண்ண டைம் குறிச்சு.
நெஞ்சு படபடக்க இனம் புரியாத ஒரு நிலை. எதிர் வீட்டுலே இருந்து தான்னு ஊகம் பண்ணிட்டேன், எதிர் வீட்டு அக்காவோட தங்கைனு. முகத்த கூட பாத்தது இல்லே சரியா. அவளுக்கு இன்னொரு குட்டித் தங்கை வேற.
அப்ப காலேஜ் ஸ்டடி லீவ் டைம். சரின்னு சொன்ன டைம் ரெடியாகி சேத்துபட்டு ஸ்டேஷன்லே போய் வெயிட் பண்ணேன். கொஞ்ச நேரம் கழிச்சு சின்னப் பொண்ணு தயங்கித் தயங்கி கிட்டே வந்து அக்கா கொடுக்க சொன்னாங்க அவங்களாலே வரமுடியலேன்னு ஒரு லெட்டர் திரும்பவும்.
ஆனா இந்த முறை விவரமா என்ன ஏன் விரும்பினேன்னு எழுதி மறுநாள் காலைலே, ஃபிளவர்ஸ் ரோடு,. பொன்னியம்மன் கோயிலுக்கு வாங்கனு சொல்லி இருந்தது...
(இன்னும் வரும் )

கருத்துகள் இல்லை: