பயணங்கள் தொடரும் பாதைகள் மாறும்
பறவைகள் கூடுகள் பலவித திசைகளில்
நிரந்தரம் என்பதே நிச்சயம் இல்லை
நிற்பதோ நடப்பதோ நம்வசம் இல்லை
வருவதும் போவதும் வாழ்க்கையின் நியதி
வர்ணம் மொழிகள் மனிதனின் படைப்பு
எல்லைகள் பிரித்து எதிரிகள் தோன்றினர்
தொல்லைகள் போர்க்களம் யாவும் விளைந்தன
எய்ததும் நாமே அம்பும் நாமே
எதனை விதைத்தோமோ அதுவே விருட்சமாய்
நொந்து பலனில்லை நேர்வது நேரும்
விந்தை அதுவே வியப்பது ஏனோ
சிந்தனை செய்தே செயல் படுவீரே
சீரிய சமுதாயம் தோன்றிடும் நாளை !
பறவைகள் கூடுகள் பலவித திசைகளில்
நிரந்தரம் என்பதே நிச்சயம் இல்லை
நிற்பதோ நடப்பதோ நம்வசம் இல்லை
வருவதும் போவதும் வாழ்க்கையின் நியதி
வர்ணம் மொழிகள் மனிதனின் படைப்பு
எல்லைகள் பிரித்து எதிரிகள் தோன்றினர்
தொல்லைகள் போர்க்களம் யாவும் விளைந்தன
எய்ததும் நாமே அம்பும் நாமே
எதனை விதைத்தோமோ அதுவே விருட்சமாய்
நொந்து பலனில்லை நேர்வது நேரும்
விந்தை அதுவே வியப்பது ஏனோ
சிந்தனை செய்தே செயல் படுவீரே
சீரிய சமுதாயம் தோன்றிடும் நாளை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக