வெள்ளி, 1 நவம்பர், 2019

வருவதும் போவதும்

பயணங்கள் தொடரும் பாதைகள் மாறும்
பறவைகள் கூடுகள் பலவித திசைகளில்
நிரந்தரம் என்பதே நிச்சயம் இல்லை
நிற்பதோ நடப்பதோ நம்வசம் இல்லை
வருவதும் போவதும் வாழ்க்கையின் நியதி
வர்ணம் மொழிகள் மனிதனின் படைப்பு
எல்லைகள் பிரித்து எதிரிகள் தோன்றினர்
தொல்லைகள் போர்க்களம் யாவும் விளைந்தன
எய்ததும் நாமே அம்பும் நாமே
எதனை விதைத்தோமோ அதுவே விருட்சமாய்
நொந்து பலனில்லை நேர்வது நேரும்
விந்தை அதுவே வியப்பது ஏனோ
சிந்தனை செய்தே செயல் படுவீரே
சீரிய சமுதாயம் தோன்றிடும் நாளை !

கருத்துகள் இல்லை: