வெள்ளி, 1 நவம்பர், 2019

அழாதே கண்ணே

பூனையொன்று எலியைத் தேடி பரணில் பதுங்கியது
எலியோ தேங்காய் மூடி கூடைதேடி ஓடி வந்தது
நாயொன்று கீழே நின்று பூனை பார்த்து குர் என்றது
குழந்தையங்கே நாயைப் பார்த்து தவழ்ந்து வந்தது
அக்காளோ அவளின் பின்னே நடந்து வந்தாளே
எலி தேங்காய் கவ்வ பூனை அதைப் பிடிக்க
கீழே விழுந்த இரண்டையும் நோக்கி நாய் பாய
குழந்தை பயந்து பெருங்குரலில் அலறிக் கத்த
ஓடிவந்த அம்மா தாவி குழந்தையைத் தூக்கி
அழாதே கண்ணே அழாதே என்று அணைத்தாள்

கருத்துகள் இல்லை: