வெள்ளி, 1 நவம்பர், 2019

நீண்ட உறக்கத்தில்

உன் பிஞ்சு விரல் பிடிக்க நீயில்லை
ஏன் அவசரமோ எமை விட்டு விலக
அன்னை அணைப்பை ஏற்க இயலாமல் போனாயே
அன்பை உணராமல் குழிக்குள் போனது ஏனோ
கால்கள் நடனமாடி ஓய்ந்து போனதா மகனே
காக்க தாய் வருவாள் காத்திருந்து ஓய்ந்தாயோ
கண்கள் பனிக்க விடை தந்தோம் மகனே
கடவுள் உன்மீது மிகஅன்பு கொண்டான் போலும்
நீண்ட உறக்கத்தில் நிம்மதி தந்து விட்டான்
நிர்மலமான உன்முகமே எம்கண் முன்னே என்றும்


[29/10, 08:11] : சுர்ஜித்துக்கு சமர்ப்பணம்

கருத்துகள் இல்லை: