புதன், 4 டிசம்பர், 2019

இயற்கை விளையாட்டு

காட்டுக்குள் தீ கடலில் பேரலைகள்
நாட்டுக்குள் கரைகாணா ஆற்று வெள்ளம்
ஊழிக்காற்று ஊரை அழிக்க அவ்வப்போது
ஊருக்கு ஊர் குடிக்க நீரில்லை
இயற்கையின் சித்து விளையாட்டு இவையாவும்
இயல்பு வாழ்க்கை இல்லாமல் போனது
ஏனிந்த மாற்றம் இயம்பிட இயலுமா
வானின்று மழையும் வெள்ளக் காடாய்
விஞ்ஞானம் விடை சொல்ல வில்லை
மெய்ஞானம் மௌனித்தே அமைதி கொண்டது
மாற்றத்தின் காரணம் மானிடன் அறியான்
சீற்றம் கொண்ட இறைவன் விளையாட்டோ ?

கருத்துகள் இல்லை: