புதன், 4 டிசம்பர், 2019

உறவை வளர்த்திடு

உனதும் எனதும் சிவப்பே இரத்தம்
உண்மை சொல்லும் நேரம் இதுவே
ஆரியம் திராவிடம் படைத்தது எவரோ
ஆண்டான் அடிமை தீண்டாமை யாரால்
மூட நம்பிக்கை தலைச்சவரம் எவராலே
மூதேவி ஆனாளே துணையை இழந்து
சாதிப் பிரிவுகள் சண்டைகள் எதற்காக
சரித்திரம் கொடுமைகளை மறந்து விட்டதோ
அடங்கிய சமுதாயம் ஆர்ப்பரித்து எழுந்தது
அதனால் தானே மாற்றமும் வந்தது
மனிதனாய் இருக்க பழகிக் கொள்
மதங்கள் போதிப்பவை நல்ல கருத்தே
மானிடன் நீயே மாற்றி எழுதினாய்
மாய்ந்தது போதும் மயக்கம் தெளிந்திடு
உலகம் உனக்கு மட்டுமல்ல அவனதும்
உறவை வளர்த்திடு வாழு வாழவிடு

கருத்துகள் இல்லை: