புதன், 4 டிசம்பர், 2019

மழைக்காதலி

மழைக்காதலியே உன்மீது மையலுற்றேன்
மடிமீது தவழ்ந்து விளையாட ஆவலுற்றேன்
மதிமயக்கும் கலையைக் கற்றதெங்கே பெண்ணனங்கே
மனங்குளிரத் தழுவிடும் உன்கரங்கள் சில்லென்று
அருகினிலே இருந்தாலே அணைப்பின் இதம்சுகமே
அனைத்தும் மறந்து கண்மூடி நானிருப்பேன்
இரவின் இருளும் அதிகாலைக் கருக்கலும்
இனியவளே உன்வரவால் குளிர்ந்து போனதுவே
கோடைக்காலத்தும் மறவாமல் வந்து என்னோடிரு
விடை கொடுப்போம் வெய்யிலின் கொடுமைக்கு
நீயின்றி நான்வாடிய நாட்கள் வேண்டாமினி
நீண்ட பயணத்தில் என்றுமே என்னோடிரு !

கருத்துகள் இல்லை: