மழைக்காதலியே உன்மீது மையலுற்றேன்
மடிமீது தவழ்ந்து விளையாட ஆவலுற்றேன்
மதிமயக்கும் கலையைக் கற்றதெங்கே பெண்ணனங்கே
மனங்குளிரத் தழுவிடும் உன்கரங்கள் சில்லென்று
அருகினிலே இருந்தாலே அணைப்பின் இதம்சுகமே
அனைத்தும் மறந்து கண்மூடி நானிருப்பேன்
இரவின் இருளும் அதிகாலைக் கருக்கலும்
இனியவளே உன்வரவால் குளிர்ந்து போனதுவே
கோடைக்காலத்தும் மறவாமல் வந்து என்னோடிரு
விடை கொடுப்போம் வெய்யிலின் கொடுமைக்கு
நீயின்றி நான்வாடிய நாட்கள் வேண்டாமினி
நீண்ட பயணத்தில் என்றுமே என்னோடிரு !
மடிமீது தவழ்ந்து விளையாட ஆவலுற்றேன்
மதிமயக்கும் கலையைக் கற்றதெங்கே பெண்ணனங்கே
மனங்குளிரத் தழுவிடும் உன்கரங்கள் சில்லென்று
அருகினிலே இருந்தாலே அணைப்பின் இதம்சுகமே
அனைத்தும் மறந்து கண்மூடி நானிருப்பேன்
இரவின் இருளும் அதிகாலைக் கருக்கலும்
இனியவளே உன்வரவால் குளிர்ந்து போனதுவே
கோடைக்காலத்தும் மறவாமல் வந்து என்னோடிரு
விடை கொடுப்போம் வெய்யிலின் கொடுமைக்கு
நீயின்றி நான்வாடிய நாட்கள் வேண்டாமினி
நீண்ட பயணத்தில் என்றுமே என்னோடிரு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக