வெள்ளி, 6 டிசம்பர், 2019

வறண்டு தான் போயிற்று

இயற்கையும் சார்ந்தவைகளையும் நன்றி மறவாதவன் தமிழன்

கதிரவனுக்குப் பொங்கல்
உறுதுணையான மாட்டிற்கு
பெரியோரைக் கண்டு வணங்க
புத்தாண்டிற்கு
சித்திரையும் கத்திரியும்
நிலவிற்கும்
நீர் கொணறும் ஆற்றுக்கும் ஆடியிலே
குல தெய்வங்களுக்கும்
புலால் தவிர்த்த மாதம்
தீயவை வதைக்கும் கொண்டாட்டம்
குளங்கள் ஏரிகளில் புனலாடி மகிழ்தல்
பனிவிழும் விடியலில்
தெருக்களில் கோலமும்
பூசணிப்பூவும்
இறை துதி பாடிய குழுக்களும்
ஊர்கள் தோறும் அரச மரத்தடியும் ஆலயமும்

வளமான வாழ்க்கை வறண்டு தான் போயிற்று

கருத்துகள் இல்லை: