புல்லாங்குழலின் இசையாக மூங்கிலில் நுழைந்து
புனலாய் நதியாய் கடலோடி கரையேறி
காற்றினிலே தென்றலாய் தீந்தமிழாய் குளிரூட்டி
கானகத்தே பசுமைச் செடிகளாய் தழைத்தோங்கி
மலைமீது தவழும் மேகமாய் வடிவெடுத்து
மணல் மேடுகளில் சித்திரமாய் உருவெடுத்து
குயில்கூவ மயிலாட கிளிக் கீச்சிட
குரங்கோடு மானோடு சிங்கமும் கர்ச்சிக்க
இயற்கையோடு இரண்டறக் கலந்து இன்புற்றிருக்க
இயலுமாயின் இப்போதே கலந்திடுவேன் உன்னோடு !
புனலாய் நதியாய் கடலோடி கரையேறி
காற்றினிலே தென்றலாய் தீந்தமிழாய் குளிரூட்டி
கானகத்தே பசுமைச் செடிகளாய் தழைத்தோங்கி
மலைமீது தவழும் மேகமாய் வடிவெடுத்து
மணல் மேடுகளில் சித்திரமாய் உருவெடுத்து
குயில்கூவ மயிலாட கிளிக் கீச்சிட
குரங்கோடு மானோடு சிங்கமும் கர்ச்சிக்க
இயற்கையோடு இரண்டறக் கலந்து இன்புற்றிருக்க
இயலுமாயின் இப்போதே கலந்திடுவேன் உன்னோடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக