புதன், 4 டிசம்பர், 2019

இயற்கையோடு கலந்திடுவேன்

புல்லாங்குழலின் இசையாக மூங்கிலில் நுழைந்து
புனலாய் நதியாய் கடலோடி கரையேறி
காற்றினிலே தென்றலாய் தீந்தமிழாய் குளிரூட்டி
கானகத்தே பசுமைச் செடிகளாய் தழைத்தோங்கி
மலைமீது தவழும் மேகமாய் வடிவெடுத்து
மணல் மேடுகளில் சித்திரமாய் உருவெடுத்து
குயில்கூவ மயிலாட கிளிக் கீச்சிட
குரங்கோடு மானோடு சிங்கமும் கர்ச்சிக்க
இயற்கையோடு இரண்டறக் கலந்து இன்புற்றிருக்க
இயலுமாயின் இப்போதே கலந்திடுவேன் உன்னோடு !

கருத்துகள் இல்லை: