புதன், 4 டிசம்பர், 2019

மாற்றம் வருமுன்னு நம்பிக்கை போச்சு

ஏன் இப்படிலாம் இருக்காங்க ஏன் மாறலேன்னு கேள்வி வரும் மனசுலே
பல விஷயங்க மதம் முதல் பணம் வரை. எல்லாமே பேராசையாலே வருதா ? இல்லே ஆட்டு மந்தை மாதிரி உணர்வா
விடை மட்டும் தெரியலே.
சாமியின் தூதுவர்னு சொல்லிக்கிட்டு சொகுசான வாழ்க்கை
மக்கள் தொண்டன்னு சொல்லிட்டு படாடோபமான செயல்பாடு
விரைவா பணக்காரனாக ஊழல்கள்
எங்கே போய்ட்டு இருக்கு மனித வாழ்க்கை. பேய்களின் உலகமான்னு கூட சந்தேகம் தோணுது
மாற்றம் வருமுன்னு நம்பிக்கை போச்சு. அழிவதற்கு அறிகுறிகள் தான் அதிகம்.
நல்லவங்கள பாக்கறதே அரிதாப்போச்சு. ஊருக்கு ஒரு நல்லவன் கூட கிடைக்கலே. கடைத்தெருலே கூறு போட்டு எல்லாத்தயும் விக்கறாங்க.
உண்மையானு கண்டுபிடிக்க google மாதிரி ஆளு தேவப் படுது. இருளே பரவுது. வெளிச்சம் வர வழி இல்லாம.
அடுத்ததலமுறைக்கு வெச்சுட்டுப் போற உலகம் எவ்வளோ கேவலமா. ஏன் இப்படி ஆச்சு, எதனால் மனுசங்க மிருகங்கள விட கேவலமா ஆனாங்க. தெளிவில்ல.
சமாதானம், சகிப்பு, சகோதரம் எல்லாம் சமாதிலே தூங்குது. விரைவிலே நாமும் தூங்கப் போயிடுவோம்.
இப்ப இருக்கிற இளய தலமுறையும் அடுத்து வரப்போற புதுத் தலமுறையும் சுமக்க போற பாரம் ரொம்பப்பெருசு.
ஏதோ தோணுச்சு. சொல்லிப்புட்டேன்.

கருத்துகள் இல்லை: