புதன், 4 டிசம்பர், 2019

மெல்லிய விரல்

கேரளத்துக் கடற்கரையில் கன்னி ஒருத்தி வந்தாளோ
கேள்விகள் பல கேட்டு தோள்மீது சாய்ந்தாளோ
சாரல் காற்று சன்னலோரம் வந்ததுவோ குளிரூட்ட
மின்னல் கீற்று தென்னங் கீற்றில் தோன்றியதோ
அரபிக் கடவோரம் அலைகள் ஆர்ப்பரித்து வந்ததுவோ
அவளும் அதனைக் கண்டு கண்சிமிட்டி நகைத்தாளோ
மெல்லிய விரல் கோத்து கடற்கரையில் நடந்தீரோ
சில்லென்ற காற்று அவள்மீது தழுவித் தொட்டதுவோ
சேலை முந்தானை உமது முகம்தனை நுகர்ந்ததுவோ
மாலை மங்கி மயக்கும் இருட்டில் என்செய்தீர்
கன்னியவள் கண்கள் சிவக்க காதல் புரிந்தீரோ
களுக்கென்ற சிரிப்புச் சத்தம் கரைகடந்து கேட்டதிங்கே
கண்ணேறு பட்டு விடும் இரகசியமாய் காதலிப்பீரா
பெண்ணவளை கைகளுக்குள் பத்திரமாய் அணைத்துக் கொள்வீரா ?

கருத்துகள் இல்லை: