புதன், 4 டிசம்பர், 2019

சுமையிறக்கி வைத்துவிடு

பேசுவது எதுவாயினும் பேதமை பார்ப்பதேனோ
பேருக்கு இருப்பதே மதமும் மற்றவையும்
ஊருக்கு ஒன்றாக உருவானது யாராலே
பாருக்குப் பொறுப்பான செயலே அவசியம்
பிறந்த போதில் நெஞ்சிலே வஞ்சமில்லை
இறக்கும் போதும் எவையுமே உனதில்லை
வாழுகின்ற நாட்களிவே வக்கணைப் பேச்செதற்கு
பாழும் மனவெறியை குழிதோண்டிப் புதைப்பாயே
அமைதியான உள்ளங்கள் ஆண்டவனின் உறைவிடம்
சுமையிறக்கி வைத்துவிடு சுத்தமான மனதோடு
சகோதரம் பழகு சமாதானம் நிலவும்
சாதிக்கப் பலவுண்டு மேதினியில் நண்பா !

கருத்துகள் இல்லை: