இடஞ்சுழியோ வலஞ்சுழியோ என்சுழி நன்றோ
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்குதுவோ இன்று
உடன்பாடற்ற உள்ளங்கள் உலகில் உள்ளவரை தூக்கமில்லை
நடப்பவை மறந்து சரித்திரம் பேசும் வீணர்கள்
படித்தவர் பண்பாளராய் இல்லாயின் மற்றெவர் ஆவாரோ
கடிவாளம் இல்லாப் புரவிபோல் தறிகெட்டு ஓட்டமாய்
தடுமாறும் உள்ளமதை தள்ளி வைத்து விட்டு
தன்னொத்த மனிதனாய் சகோதரம் பழகிப் பார்
அமைதி கொள்ளும் அன்பு பெருகும் மகிழும்
அண்ணனாய் தம்பியாய் மனிதனாய் வாழ்ந்திடும் வளமாகும்
புல்நுனிப் பனிநீராய் கதிரவன் வரவினில் ஆவியாகும்
புதிய சமுதாயம் நிலவாய்க் குளிரும் நிம்மதியதுவே !
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்குதுவோ இன்று
உடன்பாடற்ற உள்ளங்கள் உலகில் உள்ளவரை தூக்கமில்லை
நடப்பவை மறந்து சரித்திரம் பேசும் வீணர்கள்
படித்தவர் பண்பாளராய் இல்லாயின் மற்றெவர் ஆவாரோ
கடிவாளம் இல்லாப் புரவிபோல் தறிகெட்டு ஓட்டமாய்
தடுமாறும் உள்ளமதை தள்ளி வைத்து விட்டு
தன்னொத்த மனிதனாய் சகோதரம் பழகிப் பார்
அமைதி கொள்ளும் அன்பு பெருகும் மகிழும்
அண்ணனாய் தம்பியாய் மனிதனாய் வாழ்ந்திடும் வளமாகும்
புல்நுனிப் பனிநீராய் கதிரவன் வரவினில் ஆவியாகும்
புதிய சமுதாயம் நிலவாய்க் குளிரும் நிம்மதியதுவே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக