புதன், 4 டிசம்பர், 2019

சகோதரம் பழகிப் பார்

இடஞ்சுழியோ வலஞ்சுழியோ என்சுழி நன்றோ
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்குதுவோ இன்று
உடன்பாடற்ற உள்ளங்கள் உலகில் உள்ளவரை தூக்கமில்லை
நடப்பவை மறந்து சரித்திரம் பேசும் வீணர்கள்
படித்தவர் பண்பாளராய் இல்லாயின் மற்றெவர் ஆவாரோ
கடிவாளம் இல்லாப் புரவிபோல் தறிகெட்டு ஓட்டமாய்
தடுமாறும் உள்ளமதை தள்ளி வைத்து விட்டு
தன்னொத்த மனிதனாய் சகோதரம் பழகிப் பார்
அமைதி கொள்ளும் அன்பு பெருகும் மகிழும்
அண்ணனாய் தம்பியாய் மனிதனாய் வாழ்ந்திடும் வளமாகும்
புல்நுனிப் பனிநீராய் கதிரவன் வரவினில் ஆவியாகும்
புதிய சமுதாயம் நிலவாய்க் குளிரும் நிம்மதியதுவே !

கருத்துகள் இல்லை: