சனி, 25 ஜூலை, 2020

உறுதி வேண்டும்

உள்ளம் தூய்மை என்றால் உயர்ந்த மனமிருக்கும்
உண்மை அன்பு இருந்தால் பாசம் மிகும்
கள்ளமில்லா நெஞ்சினில் கருணை நிறைந்து இருக்கும்
கற்றவை கேட்டவை நல்லவை ஆதலின் நலமே
பெற்றவர் பேணுதல் தெய்வம் தொழுதற்குச் சமம்
சுற்றமும் நட்பும் சூழ்ந்த வாழ்க்கை பெரும் பேறு
சொல்வதும் செய்வதும் சுகப்பட வைப்பதும் நன்று
செல்வம் சேர்வது வறியவர் வளம்பெறச் செய்யவே
சோதனை வருங்கால் சோர்ந்து போகாத மனம்
சாதனை இவையே வேறெது தேவை வாழ்வினில்
தண்ணீரில் மிதந்தும் தாமரை இலை போலே
கண்ணீர் சொரியாத உள்மனம் உறுதி வேண்டும் !

கருத்துகள் இல்லை: