சனி, 25 ஜூலை, 2020

எங்கே மறைந்தாயோ

எப்போதும் ஏனோ கண்ணாமூச்சி
என்னோடு விளையாட இதுவாநேரம்
கண்மூடித் திறந்தாலே காண்கிலையே
கண்ணோடு நீர்த்திவலை கற்கண்டோ
உருகித் தலைசாய்த்து ஒருநாளும்
உதாசீனப் படுத்தி மறுநாளும்
உன்னைப் புரிதற்கே இயலாதோ
என்னைப் பார்க்கத் தோணலியோ
முகில் விலகியதும் நிலவுதோன்றும்
துகில் தழுவும் தென்றல் வீசும்
பகலவன் தோன்ற இருள்அகலும்
எங்கே மறைந்தாயோ நானறியேன்
எத்திசை சென்றாயோ அதனையறியேன்
பற்றும் கரம்தேடிப் பார்த்திருப்பேன்
பறந்தோடி வந்தென்னைச் சேர்வாயா ?

கருத்துகள் இல்லை: