சனி, 25 ஜூலை, 2020

மழலை மொழி

பெற்றவள் தாலாட்டுப் பாடினாளோ
சுற்றமும் சூழ்ந்துனைக் கொஞ்சினரோ
முற்றத்துக் குருவியைக் கண்டாயோ
கொற்றவளே கொஞ்சு மொழியோளே
நற்றமிழ் நாவினில் பிரளுமோ
பொற்கொடி இடையினில் தவழுமோ
பொக்கைவாய் திறந்து சிரித்திட
சிரிக்கும் சித்திரமே சிங்காரியே
பூரிக்கும் கண்களிலே நீர்முத்து
மெல்லநடை போட்டு வருவாயா
மெல்லிய விரல்பற்றி நடப்போமா
மழலை மொழியினிலே அழைப்பாயா
மகளே உனக்காகக் காத்திருப்பேன் !

கருத்துகள் இல்லை: