சனி, 25 ஜூலை, 2020

கிருமி

உன்னோடு வாழ்ந்திருக்க நீயென்ன காதலியா
உன்னை வெறுக்கிறேன் விலகியிரு நெருங்காதே
கண்ணுக்குத் தெரியா கபட தாரியே
கண்டாலே பொசுக்கிடுவேன் கண்முன் வாராதே
என்னூரில் என்நாட்டில் உனக்கென்ன வேலை
எட்டிப்போ எங்காவது தொலைந்து போய்விடு
வேண்டாத விருந்தாய் ஏனிங்கு வந்தாய்
வேதனையே உன்னால் உறவினர் மனமெல்லாம்
பிறந்த வீட்டுக்கே திரும்பப் போய்விடு
இறந்தனர் பலரும் உன்னைத் தழுவியதால்
இறைவனும் உனைக்காண உள்ளம் கொண்டானில்லை
இவ்வுலகம் உய்யட்டும் விலகிச் சென்றுவிடு !

கருத்துகள் இல்லை: